திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 06.02.2026 அன்று ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் செ. சரவணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கருவூலம் மற்றும் கணக்குத்துறை மண்டல இணை இயக்குநர் (மதுரை) கோபால், மாவட்ட கருவூலர் ஆர். கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குத்துறை) ஜெ. அமலா சாந்தமேரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.