திண்டுக்கல் கோபால் நகர் நியாயவிலை கடையில், சட்டமன்ற உறுப்பினர் ஐ. பி. செந்தில்குமார் இன்று பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப் பணத்தை வழங்கினார். மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். பொதுமக்கள் இந்த பரிசுத் தொகுப்பை மகிழ்ச்சியுடன் பெற்றுச் சென்றனர்.