திண்டுக்கல் யூனியன் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி மற்றும் சத்துணவு சங்கங்களின் கூட்டமைப்பு திண்டுக்கல் மாவட்டம் சார்பாக, திமுகவின் தேர்தல் வாக்குறுதி 313-ஐ நிறைவேற்ற வலியுறுத்தியும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பணிக்கொடை ரூ. 10 லட்சம் மற்றும் ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும் என்றும், மே மாதம் முழுவதும் விடுமுறை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலையில் முக்காடு போட்டு ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.