திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு நேற்று, விபத்தில் உயிரிழந்த அருண் அலெக்சாண்டரின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்க கோரியும், மனைவிடம் தர கூடாதென வலியுறுத்தியும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம்
போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினரின் பேச்சுவார்த்தைக்கு பின்
போராட்டம் கைவிடப்பட்டது.