திண்டுக்கல்லை சேர்ந்த விமலன் இவரை கடந்த 2024-ம் ஆண்டு சமூக வலைதளத்தில் தொடர்பு கொண்டு சிங்கப்பூரில் இன்ஜினியர்
வேலை வாங்கி தருவதாக காரைக்குடியை சேர்ந்த துரைஆனந்த் ரூ. 7, 70, 000 பெற்றுக்கொண்டு மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் மோசடி செய்த நபர் துபாயில் இருப்பது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் விமான நிலையங்களில் "லுக் அவுட் சுற்றறிக்கை" கொடுத்தனார்.
இந்நிலையில் துரைஆனந்தை கைது செய்து திண்டுக்கல் அழைத்து வந்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.