திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பொறியியல் பிரிவு அலுவலர்கள் உட்பட அனைத்து நிலை அலுவலர்களும் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரியும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண், பெண் அலுவலர்கள் தரையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பி இந்த தொடர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.