திண்டுக்கல்லில் திருச்சி சாலையில் உள்ள கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதில் இறந்தவர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து, அவர்கள் விரும்பும் இனிப்புகள், பலகாரங்கள், படையல்கள் இட்டு கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். மேலும், கல்லறைகளில் மெழுகுவர்த்திகள் ஏற்றி, மாலைகள் அணிவித்து, மலர்கள் தூவி மரியாதை செய்து பிரார்த்தனை செய்தனர். இறந்த முன்னோர்களின் ஆன்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்தனை செய்தனர். இந்த கல்லறை திருநாளில் கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வழிபாட்டில் ஈடுபட்டனர்.