திண்டுக்கல்லைச் சேர்ந்த 30 பேர் தங்களுக்குச் சொந்தமான இடத்தை அரசு கையகப்படுத்தியதற்கான இழப்பீட்டுத் தொகை கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர். நீதிமன்றம் 8 வாரங்களுக்குள் இழப்பீட்டுத் தொகை வழங்க உத்தரவிட்டும் வழங்கப்படாததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் மற்றும் மாவட்ட மேலாளர் ஆகியோர் திண்டுக்கல் மாவட்ட டாஸ்மாக் கடைகளின் அக்டோபர் 16 முதல் நவம்பர் 6 வரையிலான வருமானம் மற்றும் வங்கி விபரங்களுடன் நவம்பர் 7 அன்று நேரில் ஆஜராக உத்தரவிட்டனர். டாஸ்மாக் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக கூடுதல் அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார்.