DGGI நடத்திய சோதனை 7 மணி நேரத்திற்கு பிறகு நிறைவு
திண்டுக்கல், ஆர். எம் காலனி, வள்ளலார் நகரில் உள்ள அமைச்சர் ஐ. பெரியசாமியின் மகள் இந்திரா வீட்டில், நேற்று மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். பெண் அதிகாரி உட்பட 4 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சோதனை முடிவில், அதிகாரிகள் மூன்று பைகளில் ஆவணங்களுடன் வெளியே வந்து இரண்டு வாகனங்களில் புறப்பட்டு சென்றனர். இதனையடுத்து அமைச்சர் மகள் இந்திரா வீட்டில் கூடியிருந்த 50க்கும் மேற்பட்ட திமுகவினர் கலைந்து சென்றனர்.
