பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவு கிராமத்தைச் சேர்ந்த தனபாண்டி (51) என்பவர் வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தபோது, ஜெயசூர்யா ஓட்டி வந்த கார் மோதி விபத்துக்குள்ளானார். இதில் படுகாயமடைந்த அவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.