திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே கட்டகாமன்பட்டியை சேர்ந்த சந்தானம் மகன் பழனிச்சாமி(60) இவர் இன்று காலை கட்டகாமன்பட்டி பகுதியில் சாலையை கடக்க முயன்ற போது ஆண்டிபட்டியை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் சரக்கு வேனை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி வந்து பழனிச்சாமி மீது மோதினார். இதில் படுகாயம் அடைந்த பழனிச்சாமி உயிரிழந்தார். மேற்படி சம்பவம் குறித்து வத்தலகுண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.