திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வினோதா தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, EVR-ரோடு சமுதாயக்கூடம் அருகே பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிந்த கோபி(32) என்பவரை கைது செய்தனர். போலீசார் அவரை சுற்றிவளைத்து பட்டாக்கத்தியை பறிமுதல் செய்து, திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.