திண்டுக்கல் அருகே, வத்தலகுண்டு பைபாஸ் சாலையில் உள்ள ஒர்க் ஷாப்பில் வேலை செய்து வந்த பாண்டியராஜனை, குடிபோதையில் பைக்கை தர மறுத்ததால் சூரிய பிரகாஷ் என்பவர் கத்தியால் வெட்டி படுகாயப்படுத்தியுள்ளார். படுகாயமடைந்த பாண்டியராஜன் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி, சூரிய பிரகாஷை கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.