திண்டுக்கல்லைச் சேர்ந்த அரவிந்த் என்பவர் வத்தலகுண்டு பைபாஸ் அருகே நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது, பொன்னுமாந்துறை புதுப்பட்டியைச் சேர்ந்த திவாகர் (19) என்பவர் உடைந்த பீர் பாட்டிலை அரவிந்த் கழுத்தில் வைத்து கொலை மிரட்டல் விடுத்து, அவரிடம் இருந்த ரூ. 1,100 பணத்தைப் பறித்துச் சென்றதாக அளித்த புகாரின் பேரில், தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் முருகன், சார்பு ஆய்வாளர் அங்கமுத்து மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு, திவாகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.