நத்தம்-புதுப்பட்டியைச் சேர்ந்த 70 வயது விவசாயி கருப்பையா, கடந்த 10-ம் தேதி பைக்கில் நத்தம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, செந்துறை பிரிவு அருகே எதிரே வந்த கார் மோதி பலத்த காயமடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று (மே 17) உயிரிழந்தார். இது குறித்து நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.