நத்தம்: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது

84பார்த்தது
நத்தம்: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது
திண்டுக்கல், நத்தம் காமராஜர் நகர் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக DSP. சிபி சாய் சௌந்தர்யன் அவர்களுக்கு தகவல் கிடைத்ததின் பேரில் அப்பகுதியில் நத்தம் காவல் நிலைய போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 2 பேரை மடக்கிப்பிடித்து விசாரணையில் ஈடுபட்டபோது அவர்கள் கந்தன் மற்றும் கார்த்திக் என்பதும் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. மேலும் அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி