நத்தம் அருகே குட்டூர் பிரிவு பகுதியில் டூவீலரில் சென்றுகொண்டிருந்த செல்வம் (45) என்ற தொழிலாளி மீது காரில் வந்த ஆதினமிலகி (48) மோதியதில் படுகாயமடைந்தார். அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.