வடமதுரை அருகே காப்பிளியப்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் (மே 16) இரவு செங்கல் சூளை அருகே டூவீலரில் சென்றுகொண்டிருந்த கோபி (25) என்பவர், கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த துயரச் சம்பவம் குறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.