கொடைக்கானல்: அரிவாளுடன் இன்ஸ்டாவில் ரீல்ஸ்.. இளைஞர் கைது

சுற்றுலா தலமான கொடைக்கானலில், கையில் பெரிய வாளுடன் வாகனங்களில் அமர்ந்து திரைப்பட பாடல் பின்னணியில் வீடியோ எடுத்த வாலிபர் செல்வக்குமார் (25) கைது செய்யப்பட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து கொடைக்கானல் போலீசார் விசாரணை நடத்தி, வழக்குப்பதிவு செய்து வாள் மற்றும் மோட்டார் சைக்கிளை கைப்பற்றினர். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இதுபோன்று வீடியோ பதிவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
