நிலக்கோட்டை: ஆட்டோ கவிழ்ந்து மாணவர்கள் காயம்

606பார்த்தது
நிலக்கோட்டை: ஆட்டோ கவிழ்ந்து மாணவர்கள் காயம்
பட்டிவீரன்பட்டி அருகே ஆட்டோ கவிழ்ந்து தனியார் பள்ளி மாணவர்கள் ஆறு பேர் காயம் அடைந்தனர். சித்தரேவு, கதிர்நாயக்கன்பட்டி, நெல்லுார் கிராமங்களை சேர்ந்த பள்ளி மாணவர்கள் பட்டிவீரன்பட்டி தனியார் பள்ளியில் படிக்கின்றனர்.

பள்ளி முடிந்து வீட்டிற்கு ஆட்டோவில் சென்ற போது கவிழ்ந்ததில் மாணவர்கள் வேல்முருகன், விஷால், கமலேஷ் கண்ணன், மனோ பிரசாத், தமிழ்ச்செல்வன், பிரவீன், ஆட்டோ டிரைவர் பிரபு காயமடைந்தனர். பட்டிவீரன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
Job Suitcase

Jobs near you