திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே ரெட்டியார்பட்டி சுடுகாடு பகுதியில் பாலசுப்பிரமணி (55) என்பவர் தலை மற்றும் முகத்தில் தாக்கி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து கன்னிவாடி போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.