உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 8 ஊராட்சி நியாயவிலைக் கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ. 3000 ரொக்கம் மற்றும் விலையில்லா வேட்டி சேலைகளை வழங்கினார். கள்ளிமந்தயம், கரியாம்பட்டி, கூத்தம்பட்டி, கே. டி. பாளையம், மோதுப்பட்டி, அப்பியம்பட்டி, பெருமாள்கோவில் வலசு மற்றும் கப்பல்பட்டி ஆகிய இடங்களில் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.