பழனி தண்டாயுதபாணி சாமி கோவில் வைகாசி விசாக திருவிழாவின் முக்கிய நிகழ்வான முத்துக்குமாரசுவாமி-வள்ளி, தெய்வானை திருக்கல்யாண வைபவம் நேற்று பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் வேதமந்திரங்கள் முழங்க நடைபெற்ற இந்த தெய்வீக நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். பின்னர் சுவாமி, அம்மன் வாகனங்களில் வீதி உலா வந்தனர். விழாவின் சிகர நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.