பழனியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் மாசித் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக, அலங்கரிக்கப்பட்ட யானை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இந்த நிகழ்வில் பழனி திருக்கோவில் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.