பழனி அருகே பாலப்பன்பட்டி பகுதியில் ரயில் தண்டவாளத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அடிபட்டு சடலமாக கிடந்தார். வெள்ளை சட்டை, பச்சை வேட்டி அணிந்திருந்த அந்த நபர் கோவை-மதுரை ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தது தெரியவந்துள்ளது. பழனி ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.