திண்டுக்கல் மாவட்டம் பழனி கே.வி. மருத்துவமனையில் அன்பு பாலம் தன்னார்வலர்கள் சார்பாக இலவச மருத்துவ முகாம் இன்று (டிசம்பர் 24) நடைபெற்றது. சர்க்கரை நோய், இருதய நோய், எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். பழனி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வந்த நூற்றுக்கணக்கானோர் மருத்துவ முகாமில் சிகிச்சை பெற்றனர். நோயாளிகளுக்கு மருந்து மற்றும் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன.