பழனியில் உள்ள அடிவாரம் பகுதிகளை சேர்ந்த 126 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி பழனி தனியார் மஹாலில் நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில், வட்டாட்சியர் பிரசன்னா முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் இ. பெ. செந்தில்குமார் எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பட்டாக்களை வழங்கினார்.