பழனி காந்தி சந்தைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை அன்று கட்டடப் பணிகளுக்காக மணல் ஏற்றி வந்த லாரி, மணலைக் கொட்டும் போது எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் உட்பட இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.