பழனி புளியம்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் வினிஸ் என்பவர், சிறுமி ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பழனி நகர காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த வினிஸை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.