மேல்மலைக் கிராமமான கூக்காலில், முனீஸ்வரன் கோயில் அருகே தனியாருக்குச் சொந்தமான இடத்தில் இருந்த பழமையான யூக்காலி மரம் ஆபத்தான நிலையில் முறிந்து விழுந்தது. இதனால் இரண்டு மின் கம்பங்கள் மற்றும் ஒரு கார் சேதமடைந்தன. இதன் காரணமாக கூக்கால்-பழம்புத்தூர் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வனத் துறையினர் மரத்தை அகற்றிய பிறகு போக்குவரத்து சீரானது. மின்கம்பங்கள் சேதமடைந்ததால் கூக்கால் பகுதியில் மின் தடை ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகினர்.