திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சித்தநாதன் கல்யாண மஹால் அருகே கார் கண்ணாடியை உடைத்து திருட முயன்ற நாகராஜ் (57) மற்றும் ராகவன் (36) ஆகிய இருவரை அடிவாரம் போலீசார் கைது செய்தனர். இவர்கள் திருச்சி திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.