திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பூத்தாம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே வேலுசாமி என்பவரின் கடை மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு, சுமார் ரூ. 10 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்ரீராமபுரம் பகுதியிலும் இரண்டு பெட்டிக்கடைகளில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. இது தொடர்பாக வேடசந்தூர் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.