திண்டுக்கல் வேடசந்தூர் அருகே சித்தமரம் நால்ரோடு பகுதியில், சலூன் கடைக்காரர் மோகன், வாடிக்கையாளர் முனியப்பனிடம் முடிவெட்ட தாமதமானதால் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மோகன், சேவிங் கத்தியால் முனியப்பன் கன்னத்தில் குத்தினார். காயமடைந்த முனியப்பன் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வேடசந்தூர் போலீசார் மோகனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.