வேடசந்தூர் அருகே சாலையூர் நால்ரோடு பகுதியில் தனியார் மில் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. கும்பகோணத்திலிருந்து கேரளா நோக்கிச் சென்ற கார், திடீரென திருப்பிய பேருந்தின் பக்கவாட்டில் சிக்கி நசுங்கியது. இந்த கோர விபத்தில் கேரளாவைச் சேர்ந்த ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.