திண்டுக்கல் மாவட்டம் கூடலூரில் இருசக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் கடை நடத்தி வரும் ஆறுமுகம் (65) என்பவர், வாகனத்தை எடுப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மர்ம நபரால் கத்தியால் நெஞ்சில் குத்தப்பட்டு படுகாயமடைந்தார். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆறுமுகம் குறித்து குஜிலியம்பாறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.