சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் சிரமப்பட்டு வருவதாகவும், சர்வதேசப் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் மத்திய அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும் திமுக குற்றம்சாட்டியுள்ளது. மேலும், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இன்று (மார்ச் 15) தமிழகம் முழுவதும் கண்டனக் குரல் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த இக்கட்டான சூழலைக் கையாள்வது குறித்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (மார்ச் 14) அவசர ஆலோசனை நடத்தினார்.