‘தேர்தல் விளம்பரத்துக்காக விவசாயிகளிடம் திமுக மோசடி’ - அண்ணாமலை

19பார்த்தது
‘தேர்தல் விளம்பரத்துக்காக விவசாயிகளிடம் திமுக மோசடி’ - அண்ணாமலை
பொங்கலுக்கு ரூ.3,000 கொடுக்க திமுக அரசிடம் பணம் இல்லாமல் விவசாயிகளின் பயிர்க்கடன் பணத்தை மடைமாற்றியதாக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அவர் இன்று (ஜன.09) கூறியதாவது, “தமிழக கூட்டுறவு சங்கங்களில் பழைய பயிர்கடன் முழுத் தொகை கட்டிவிட்டு, புதிய கடன் புதுப்பிப்புக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர். பயிர் கடன் புதுப்பிக்கப்படாததால் கடும் பண நெருக்கடியில் சிக்கியுள்ளனர். விளம்பரத்துக்காக, விவசாயிகளை திட்டமிட்டு திமுக மோசடி செய்கிறது” என்றார்.

தொடர்புடைய செய்தி