தமிழக அரசியல் களம் சட்டமன்ற தேர்தலையொட்டி பரபரப்பில் உள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக சட்டசபை தேர்தலுக்கான தனது முடிவை இன்னும் அறிவிக்கவில்லை. இதனால் அக்கட்சி திமுக கூட்டணியில் சேருமா அல்லது அதிமுக கூட்டணியில் சேருமா என்பதில் தெளிவு இல்லை. இதற்கிடையில், அதிமுகவின் 2 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், கூட்டணியில் சேர ஒரு மாநிலங்களவை சீட் வழங்க வேண்டும் என தேமுதிக தொடர்ந்து கேட்பதால் அதிமுகவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.