நாங்குநேரி இரட்டைக்கொலை சம்பவம் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் விளம்பர திமுக ஆட்சிக்கு சான்றாக அமைந்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். இத்தகைய கொடூர தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது மிக கடுமையான சட்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அவர் தனது X தள பதிவில் வலியுறுத்தியுள்ளார்.