ஜோலார்பேட்டை அருகே வரும் பிப்.14-ம் தேதி நடைபெறவுள்ள திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டு பணிகளை, அமைச்சர் எ.வ.வேலு மற்றும் டிஐஜி தர்மராஜ் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வரும் அரங்கில், 47 தொகுதிகளை சேர்ந்த 1.50 லட்சம் நிர்வாகிகள் பங்கேற்பதற்கான பாதுகாப்பு மற்றும் வாகன நிறுத்த வசதிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.