விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சியில் இன்று (பிப்.7) திமுக தென்மண்டல இளைஞரணி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். தொடர்ந்து, தொண்டர்களைப் பார்த்து நெகிழ்ச்சியடைந்த உதயநிதி ஸ்டாலின், செல்ஃபி வீடியோ எடுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். தொடர்ந்து, திமுக தொண்டர்கள் மாநாட்டு திடலில் குவியத் தொடங்கியுள்ளனர்.