பொம்மலாட்டக் கலைஞரும், திராவிட இயக்க பற்றாளருமான கலைமாமணி மு.கலைவாணன் அவர்கள் மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தமளிப்பதாக கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார். மேலும், ‘சென்னை சங்கமத்தில் தொடக்கத்திலிருந்து பங்காற்றியவர். 1989ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, தேர்தல் பரப்புரைக்காக மாநில அளவில் பொம்மலாட்ட நிகழ்ச்சிகளை நடத்தி, நம் கழகத்தின் வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்துச் சென்ற கொள்கைப் பற்றாளர்” என்றார்.