சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 13 வயது மகனுக்கு ஓட்டுநர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், கடைக்கு சென்றுவிட்டு திருப்பிய தனது மகனை அழைத்துச்சென்ற அவர், தகாத இடங்களில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அழுதுகொண்டே வீட்டிற்கு வந்த தனது மகன் இது குறித்து கூறியதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.