அமெரிக்காவுக்கு கடல் வழியாக போதைப்பொருள் கடத்தும் கும்பல்களை ஒடுக்க அதிபர் டிரம்ப் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, கிழக்கு பசிபிக் கடல் பகுதியில் போதைப்பொருள் கடத்தி வந்ததாக சந்தேகிக்கப்படும் படகு மீது
அமெரிக்கா டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். கடல் வழி போதைப்பொருள் கடத்தலை தடுக்க
அமெரிக்கா தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.