போதையில் மாணவர்கள் சாப்பாடு பாத்திரத்தில் கால் வைத்து தூங்கிய நபர்

7பார்த்தது
தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள விடுதிக் காவலாளி ஒருவர், குடிபோதையில் சமைத்த சோற்றில் காலை வைத்துக்கொண்டு தூங்கிக் கொண்டிருந்துள்ளார். இதனை வீடியோவாக பதிவு செய்த மாணவர்கள், நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். தொடர்ந்து, அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். மாணவர்களால் வைரலான வீடியோவில் பதிவான இந்த சம்பவம், மாவட்ட அதிகாரிகளால் உடனடி நடவடிக்கை எடுக்க வழிவகுத்தது. விடுதியில் மாணவர்களுக்கு சுகாதாரமான உணவை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நன்றி: timesofindia

தொடர்புடைய செய்தி