அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு துரோகி என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். ஈரோட்டில் இன்று (நவ.26) நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "பழனிசாமி செய்தது அனைத்தும் துரோகம்தான். தமிழக விவசாயிகளுக்காக பிரதமரை சந்தித்து அவர் கோரிக்கை வைத்தாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த திடீர் குற்றச்சாட்டு ஆளும் மற்றும் எதிர்கட்சி அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.