தருமபுரி அருகே 108-வது பிறந்தநாளை கொண்டாடிய மூதாட்டி ஒருவருக்கு, அவரது மகன்கள், மகள்கள் மற்றும் 350 பேரன், பேத்திகள் ஒன்றிணைந்து கேக் வெட்டி, கனகாபிஷேகம் செய்து நெகிழ்ச்சியோடு கொண்டாடியுள்ளனர். 5 தலைமுறைகளை கண்ட அந்த மூதாட்டியிடம் குடும்பத்தினர் அனைவரும் காலில் விழுந்து ஆசி பெற்ற இந்த நெகிழ்ச்சியான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.