எம்.ஆர்.விஜயபாஸ்கரின் தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்கை வாபஸ் பெறுவதாக தவெக வேட்பாளர் மதியழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். முன்னதாக, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கரூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிமுக-வில் இருந்து விலகி, தவெக-வில் இணைந்துள்ளதால், இந்த வழக்கு நடத்துவது குறித்து மனுதாரர் மதியழகனின் கருத்தை கேட்டு தெரிவிப்பதாக அவரது தரப்பு வழக்கறிஞர் கூறியிருந்தார். இந்நிலையில், இன்று (ஜூலை.17) அந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது.