சென்னையில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அயனாவரம் மற்றும் திருமங்கலத்தில் அமலாகத்துறை அதிகாரிகள் குழுவினர் இன்று (மே 19) காலையிலேயே சோதனையை தொடங்கியுள்ளதாக தெரிகிறது. பழைய கார் வாங்கி விற்கும் பைனான்சியர் இல்லத்தில் சோதனை நடைபெறுவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.