வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை சட்டவிரோத பணப்பரிமாற்ற புகாரின் கீழ் விசாரிப்பதற்கு அனுமதி கோரி தமிழக அரசுக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியுள்ளது. ஏற்கெனவே அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.